Moive: Aadhiyum Andhamum

Song: Mayam Seidhayo 


Tamil Lyrics



பாடகி : சின்மயி


இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்


பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என்னை நான் மறந்தேனே மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என்னை நான் மறந்தேனே


பெண் : விழிகளில் வானவில்லை கோர்த்து செவியினில் புன்னகையும் சேர்த்து முதல் முறை வாழ்வினில் சுவாசித்தேனே வானத்தில் மிதக்கும் மேகம் போலே உன்னை தேடி கரைந்த உள்ளம் சிறகின்றி இன்றுதான் பறந்ததே


பெண் : காற்றை போல் வீசினேனோ சிறகின்றி பறந்தேனோ கண்ணா நான் உன்னை அடைய நான் வரைந்த சித்திரமோ என் முன்னே நிற்க்குதேனோ அன்பே நீ என்னை ஏத்துக்க


பெண் : நீதான் நீதானோ நான் வாழும் அர்த்தமோ இமையில் இமையில் நடுவில் நின்றாய் நின்றாய் எந்தன் உறக்கம் கொண்டு சென்றாயோ கண்ணை கட்டி உன்னை காட்டில் விட்டால் கூட என்னை வந்தடைவாயோ


பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என்னை நான் மறந்தேனே மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என்னை நான் மறந்தேனே


பெண் : நான் விரலால் தொடும் பொது நீ என்னை பார்க்கும்போது கண்ணால் நாம் பேசிக்க நாம் வாழும் வாழ்வே என்றும் முடிவில்லா வாழ்வாய் மாறும் அன்பே நீ ஏன்டா யோசிக்க


பெண் : எந்தன் உயிரோ பிரிந்தாலும் உனக்குள் வாழ்வேனோ தேடல் தேடல் இனி உந்தன் தேடல் எந்தன் ஆயுள் முடியும் வரை தேடல் இரவும் பகலும் இனி மாறும் மாறும் என்னால் உந்தன் உலகம் மாறிபோகும்


பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என்னை நான் மறந்தேனே மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ என் மனதை நான் தந்தேனே