Moive: Aadhiyum Andhamum
Song: Aararirao
Tamil Lyrics
பாடகர் : நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி உன் காயம் எல்லாம் தானாக தீரும் என் தோளில் சாய்ந்து….தூங்கடி
ஆண் : கனவாய் எல்லாம் மறைந்தே போகும் விடிந்தால் இருள் விட்டு பறக்கும் உனக்காய் தினம் விழித்தேன் அன்பே உறங்கவில்லையே
ஆண் : கண்ணீர் உந்தன் கன்னத்தை தொட்டால் என் விரல் வந்து தொட்டு துடைக்கும் வெண்ணிலா மேலே கரைகள் எல்லாம் குறைகள் இல்லையே
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி
ஆண் : உயிரே உந்தன் உணர்வில் ஒரு சலனம் இன்றி என்ன நினைப்பு வழிகள் எல்லாம் தொலையும் வரை காவலிருப்பேன்
ஆண் : முள் மேல் உந்தன் நிழல் விழுந்தால் குறைந்தா விடும் உன் மதிப்பு உன்னை பார்கின்ற நொடி போதுமே உயிர் பிழைப்பேன்
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி உன் காயம் எல்லாம் தானாக தீரும் என் தோளில் சாய்ந்து….தூங்கடி